×

கடம்பூர் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்தது

 

சத்தியமங்கலம், ஜூலை 21: கடம்பூர் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம், ஹாசன் பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஹாசன் பகுதியை சேர்ந்த யோகேஷ் (42) என்பவர் ஓட்டினார். மேலும் 3 தொழிலாளர்கள் லாரியில் உடன் இருந்தனர்.

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கானக்குந்தூர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திக்கரை என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த கடம்பூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம்பட்ட 4 பேரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து கடம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடம்பூர் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Kadampur hillside ,Satyamangalam ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது